அன்புடன் ! அழகிய வடிவில் காண நமது இணையத் தள எழுத்துருவினை இங்கே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
...

Sunday, June 19, 2011

முகம்மதின் இளம்பருவம் : தாயாரின் மரணம்

முகம்மது முன்பின் தெரியாதவர்களின் சூழ்நிலையில் வளர்ந்தார். தான் வளரும் போது யாருடன் வாழ்ந்தாரோ, அவர்கள், தன்னைச் சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அறிந்திருந்தார். தன் தாய் வருடத்தில் இருமுறை தன்னைப் பார்க்க வந்தாலும், ஏன் சொந்த தாய் தன்னை விரும்பவில்லை என ஆச்சரியப்பட்டிருக்கலாம்.

முகம்மது ஆறு மாத குழந்தையாக இருந்த போது அவருக்குப் பாலூட்டி வளர்த்த தாதி ஹலீமா அறுபது ஆண்டுக்குப் பிறகு சொன்ன தகவல் : முக்ம்மது வசதி இல்லாத ஓர் ஏழை விதவையின் அனாதைக் குழந்தை. பண்க்கார வீட்டுக் குழந்தை எவரும் ஹலீமாவுக்கு கிடைகவில்லை. ஆகவே எதோ உபரியாக வரும் கொஞ்ச வருமானத்தையும் உதறித்தள்ள அவள் விரும்பவில்லை என்றே கடைசியில் குழந்தையைப் பேண ஒப்புக் கொண்டாள். இச்சொல்லுலும் செயலில் அவள் குழந்தையை எவ்வாறு வேண்டா வெறுப்பாக கவனித்திருப்பாள் எனத் தெரிகிறதல்லவா ? முக்கியமாக அவருடைய குணநலத்தை நன்கு உருவாக்கப் பட வேண்டிய சிறு குழந்தைப் பருவத்தில், அன்பு காட்டாத வளர்ப்புக் குடும்பத்துடன் இருந்தது பற்றி அவருக்கு மனத்தாக்கம் இருந்திருக்கலாமோ ?

முகம்மது தனிமையான குழந்தை. கற்பனை உலகத்தை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு, கூட யாரும் இல்லாத தனது நண்பர்களோடு கற்பனை உலகில் பேசிக் கொண்டிருப்பார் என ஹலீமா கூறினாள். உலகில் அன்பு என்பதையே உண்மையாக உணரமுடியாதா, யாராவது அன்புக் காட்டமாட்டார்களோ என ஒரு குழந்தையின் மனதில் ஏற்பட்ட ஏக்கத்தின் பிரதிபலிப்பு இப்படித்தான் இருக்குமோ ?

முகம்மதின் மனநலனைப் பற்றி அவர் தாதிக்குக் கவலை உண்டாகி அமீனாவிடம் அவரது ஐந்தாவது வயதில் திரும்ப எடுத்துச் சென்றாள். அமீனாவுக்கு வேறு கணவனும் கிடைக்காதத்தினால் குழந்தையை திரும்ப ஏற்றுக் கொள்ள முதலில் விரும்பவில்லை, பிறகு ஹலீமா அமீனாவிடம் முகம்மதுவின் விபரீதமான நடத்தையைப் பற்றியும், முகம்மதின் மனக்கற்பனையின் விலைகளையும் கூறினாள். இபின் இஷாக் ஹலிமாவின் வார்த்தைகளில் கூறுவது :

ஹலீமாவின் சொந்த மகன் என்னிடம் சொன்னது : '' இக்குழந்தைக்கு எதோ தாக்கிவிட்டதாகத் தெரிகிறது, ஆகவே இத்தாக்கத்தின் பின்விளைவுக்கு முன் இவனை அவன் குடும்பத்தில் சேர்த்துவிடு''. இவனை ஏதாகிலும் பேய் பிசாசு பிடித்துவிட்டதா என முகம்மதின் தாய் அமீனா என்னை வினவினாள். நான் பதில் சொல்லும் வரை என்னை விடவில்லை. அதற்கு 'ஆம்' என்றேன். (1)

குழந்தைகள் தங்களது படுக்கையின் கீழ் பூதங்கள் இருப்பது போல நினைப்பதும், அதைப் பற்றி தங்கள் கற்பனை நண்பர்களிடம் கூறுவதும் சாதரணமானது தான். ஆனால் முகம்மதின் வழக்கில் ஏதோ ஆபத்தான விபரீதம் போல் இருக்கின்றது. '' இவனை எதோ தாக்கிவிட்டது'' என ஹலீமாவின் கணவர் கூறினார். இந்த தகவல் முக்கியமானதாகும்.

பல வருடங்களுக்குப் பிறகு, முகம்மது தனது குழந்தைப் பருவ அனுபவங்களை சொன்னார். ஓர் விளிம்பு உயர்ந்த தங்க தாம்பாளம் நிறைய பனிக்கட்டிகளை நிரப்பி வெள்ளை உடுப்பில் இரு மனிதர்கள் என்னிடம் வந்தனர். என்னைத் தூக்கிப் போய், என் உடம்பைப் பிளந்து, எனது இதயத்தை எடுத்து அதையும் உடைத்து, அதிலிருந்து ஓர் கருப்பு ரத்தக்கட்டியை எடுத்து மிகத்தூரத்தில் தூக்கி எறிந்தனர். பிறகு பனிக்கட்டியினால் என் இதயம், உடலைக் கழுவி சுத்தப்படுத்தினர். ( 2 )

புத்தியில் அசுத்தங்கள் ரத்தக்கட்டிகளாக இதயத்தில் இருக்க முடியாது என்பதை மிகத் தெளிவாக நாம் அறிவோம். பாபங்கள் ரண சிகிச்சையினாலும் நீக்க முடியாது, சின்னக் குழந்தைகளுக்கு பாபம் என்பதே கிடையாது, மேலும் பனிகட்டி கழுவுவதற்கு ஒரு நல்ல சாதனமுமல்ல. இந்த முழுக்கதை நிச்சயமாக மனபிரமையின் இட்டுக்கட்டின சுத்தமான கற்பனையே.

தற்போது முகம்மது தன் தாயுடன் சேர்ந்து இருந்தாலும், அது அதிக நாள் வரை நீடிக்கவில்லை. ஒரு வருடம் கழித்து அமனா காலமானாள். முகம்மது அவளைப் பற்றி அதிகம் கூறவில்லை. அவள் இறந்து, 53 வருடங்களுக்குப் பிறகு முகம்மதின் முதிய வயதில் மெக்காவை வென்றதும், மெக்கா மதீனாவுக்கு நடுவில் இருக்கும், அப்வாவில் உள்ள அமீனாவின் உடலை அடக்கம் செய்த கல்லறைக்கு வருகை தந்தார். ' இது என் தாயின் கல்லறை, கடவுள் இங்கு வர என்னை அனுமதித்தார், நானும் அவளுக்காக பிரார்த்தனை செய்யக் கேட்டேன், ஆனால் அதற்கு கடவுள் அனுமதி எனக்கு கிட்டவில்லை. ஆகவே, அவளை நினைவில் கொண்டேன். அவளின் மென்மையான நினைவு வந்ததும், தன்னை மீறிய சோகத்தால் அழுதேன். ( 3 )

ஏன் கடவுள் அவருடைய தாயாருக்காக பிரார்த்தனை செய்ய அனுமதிக்கவில்லை ? அவள் இறந்த பின்னரும் மன்னிப்புக்குத் தகுதி ஆகாதவளா ? புரியவில்லை. என்னதான் ஆனாலும் தாயல்லவா ? நேரிடையாக கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகாவது தன் தாயை முகம்மதால் மன்னிக்க முடியவில்லை. மறக்க முடியாத மனதிலிருந்து பழைய ரணங்கள் குணமாகாததினால், மனம் நொந்து அவர் தன் தாயை அன்பு செலுத்தாத கொடூரப் பெண்மணியாகவே நினைந்து மிகவும் வெறுத்தார்.

தொடரும் ....
1. Sirat Ibn Ishar, page 72. Ibn Ishaq ( Pronounced Is-haq, Arabic for Isaac ) was a Muslim historian, born in Medina approximately 85 years after Hijra ( 704. died 768 ). ( Hijra is Muhammada's Immigration to Medina and the beginning of the Islamic calendar ), He was the first biographer of Muhammad and his war expeditions. His collection of stories about Muhammad was called  '' Sirat-al-Nabi '' ( Life of the Prophet '' ). The book is lost. However, a systematic presentation of Ibn Ishaq's material with a commentary by Ibn Hisham ( d.834 ) in the form of recension is available and translated into English. Ibn Hisham, admitted that he has deliberately omitted some of the stories that were embarrassing to Muslims. Part of those embarrassing stories were salvaged by Tabari, ( 838 -923 ) one of the most prominent and famous Persion historians and a commenrator of the Qu'ran.

2. W.Montgomery Watt: Translation of Ibn Ishaq's biograpphy of Muhammad (p.36)

3. Tabaqat Ibn Sa'd p.21. Ibn Sa'd ( 784 - 845 ) was a historian, student of al Waqidi. He classified his story in eight categoris, hence the name Tabaqat ( categories ). The First iis on the life of Muhammad ( Vol. 1 ), then his wars ( Vol. 2), his campanions of Mecca ( Vo/ 3), his companions of Medina (Vol. 4), his grand children, Hassan and Hussein and other prominent Muslims ( Vol. 5), the followers and the companions of Muhammad  ( Vol. 6), his later imporatan followers ( Vol. 7 ) and some early Mulsim women ( Vo. 8 ). The quotes from Tabaqat used in this book are taken from the Persian translation by Dr. Mahmood Mahdave Damghani. Publisher Entesharat-e Farhaand Va Andishesh. Tehran, 1382 solar hijra ( 2003 AD ).

4 comments:

  1. அருமையான ஒரு பதிவு சகோ. இன்னும் ஒரு முறை ஆழமாகப் படித்துவிட்டு மேலும் கருத்திடுகின்றேன் நன்றிகள்

    **********************************

    வலைப்பதிவர்களே கொஞ்சம் கவனியுங்க ? ரொம்ப அவசரம்

    ReplyDelete
  2. அருமையான நடை
    இபின் இஷாக்,வாகிதி,தபரி மூவரின் எழுத்துகள் அக்கால கட்டத்தில் அதிகம் எதிர்க்கப்[விமர்சிக்க] படவில்லை,தடை செய்யப் படவில்லை என்றே தோன்றுகிறது.ஒருவேளை தடை செய்யப் பட்டு இருந்தால் இப்போது கிடைத்திருக்காது.இப்போதைய பிரச்சாரகர்கள் இம்மூவரின் எழுத்துகள் பலமற்ற ஹதிதுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை என்று ஏற்றுக் கொள்வதில்லை.
    சில சமயம் ஆதார பூர்வ ஹதிதுகளிலும் சில உண்மைகள் வெளிப்பட்டு விடுகின்றன.இத்னையும் ஹதிதுகளை திருப்பி சோதித்து நீக்க வேண்டும் என்னும் குர‌ல் எழுவது இத்னால்தான்.
    நன்றி

    ReplyDelete
  3. சார்வாகன் மீண்டும் வந்தமைக்கு நன்றிகள். இப்பதிவுகளை தொடர பெரும் பிரச்சனைகள் வர ஆரம்பித்துள்ளன.. சிலர் தொடரக் கூடாது என மின்னஞ்சல் அனுப்புகின்றார்கள் .. அதனால் மின்னஞ்சல் முகவரியயை வெளியிடுவதை நிறுத்திவிட்டேன்.

    தமிழ்மணத்தில் சேர்த்தால் கட்டணம் கேட்கின்றார்கள். என்ன செய்யலாம் என தெரியவில்லை ? கட்டணம் கட்டி எழுதும் அளவுக்கு நான் பணம் படைத்தவன் இல்லை..

    ஆனாலு தொடர்ந்து இப்புத்தகம் முழுவதையும் இங்கு கொண்டு வரப் போகின்றேன். அது முடிந்ததும் மேலும் பல பதிவுகளை தொடரலாம் என இருக்கிறன்.

    ReplyDelete
  4. // இபின் இஷாக்,வாகிதி,தபரி // அவர்களின் எழுத்துக்களை புறந்தள்ள முடியாத ஒன்று தான். அவர்கள் மூலம் பல அடிப்படை தகவல்களை நம்மால் பெற முடிகின்றது. பல தரவுகள் இல்லாமல் ஆக்கப்பட்டும் உள்ளன, அது துரதிருஷ்டவசம் எனலாம்

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் யாவும் தணிக்கை செய்யப்படாமலேயே வெளியிடப்படுவதால், கருத்துக்கள் யாவுக்கும் எமது தளம் பொறுப்பேற்காது. வரம்பு மீறும் கருத்துக்கள் பின்னர் தணிக்கை செய்யப்படலாம், அல்லது முற்றிலும் நீக்கப்படலாம். நன்றிகள் !